
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கல்வெட்டில், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என கோயில் குடமுழுக்கு விழா தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மத நிகழ்வுகளில் அரசியல் கூடாது; மிகவும் வருத்தமாக உள்ளது; கோயிலில் அடுத்து நடைபெறும் விழாக்களில் சட்டப்படி அனைவரின் பெயரும் இடம் பெற வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளனர்.
