
தமிழ்நாடு கிருஸ்ணகிரி பகுதியில் சரியாக இன்று இரவு 7.52 மணியளவில்,3.0 ரிக்“டர் அளவு கோலில் இலேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து பொதுமக்கள் பாரும் பயப்படத் தேவையில்லை என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
பூமியின் உள் அமைப்பில் ஏற்படும் மிகச் சாதாரணமான ஒரு சிறிய அழுத்த வெளியீடு மட்டுமே என தெரிவித்தள்ளது.
