
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உருக்காலையில் சூடான திரவ இரும்பு கசிந்து தீ விபத்து எற்பட்டது இதில் 8 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பல ஊழியர்கள் கடுமையான தீக்காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முறையான பாதுகாப்பு தணிக்கைகள் இல்லாததும் விபத்திற்கு காரணம் என தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
