
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பஸ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டு வருகின்றன
இதன் மூலம் வருவாய் அதிகரிப்பதுடன் டீசல் செலவை குறைக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றன
முதல் கட்டமாக விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை வேலூர் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் 136 புறநகர் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன
இவையெல்லாம் சேவைத் துறை என்று அழைக்கப்படக்கூடிய சாமானிய மக்களுக்காக நடத்தப்படக்கூடிய துறை. இந்த துறைகளில் லாப நஷ்டம் தாண்டி மக்களுக்கு சேவை கிடைக்கிறதா என்பது தான் முக்கியம்
ஒரே ஒரு மாணவிக்காக பள்ளிக்கூடம் நடத்தப்படும் ஊர் தமிழ்நாடு.
அந்த மண்ணில் இருந்து லாப நோக்கத்திற்காக அரசு பஸ் சேவைகளை குறைப்பது என்பது நிச்சயம் மக்களுக்கு எதிரானது!
