
இந்திய தேசத்தின் 80 -வது சுதந்திர விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி நாட்டுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி, இன்று உலகின் பல நாடுகள் தங்களுக்குத் தேவையான முக்கிய கனிம வளங்களுக்காக இந்தியாவையே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது”.
“பழைய சட்டங்களை வைத்துக்கொண்டு இந்தியாவால் முன்னேற முடியாது”.
“உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் போது, உலக நாடுகள் இந்தியாவைப் பார்க்கும் பார்வையே முற்றிலும் மாறும்.
நாம் எப்போதும் பிற நாடுகளைச் சார்ந்தே இருக்க முடியாது. நாம் அனைத்துத் துறைகளிலும் சுயசார்பு நாடாக மாற வேண்டும்.” என்று பேசினார்.
