
சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவில் காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெறுகிறது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் நடக்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றுள்ளார். 14 கடலோர மாவட்டங்களில் Fish Net Initiative, தனுஷ்கோடியில் ஃபிளமிங்கோ பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில். அதில், “வனக்காவலர்கள் நியமன ஆணைகளை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள்தான் காடுகளின் முதுகெலும்பு; நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள்தான். தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.இந்தியாவிலேயே அதிகஅளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு”இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மீட்பு மிகப் பெரிய அளவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், புதிதாக 1000 பூங்காக்கள், 62 காப்புக்காடுகள், 2 பறவைகள் சரணாலயங்கள் உறுவாக்கப்பட்டுள்ளன.தமிழர்களின் வாழ்வியலில் இயற்கையும் மொழியும் யாராலும் பிரிக்க முடியாது” இவ்வாறு தெரிவித்தார்.