
டெல்லி மாணவர்கள் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட, குற்றப் பின்னணி ஏதுமில்லாதவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் வினாத்தாள் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவிதமான கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் குற்ற பின்னணி இல்லாத நபர்கள் யாராவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வீடியோ பதிவுகள் என அனைத்தையும் பத்திரமாக வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
