
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள நுழைவுப் பகுதியில் “உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை” என இடுக்கு பிள்ளையார் கோவிலில் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஜுலை 25ஆம் தேதி அன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் இடுக்கில் சிக்கி ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் மணிக்குமார் உயிரிழந்தார். இதையடுத்து அக்கோவிலின் உள்ளே சென்று வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
