
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் மண்டபத்தில் இன்று பயங்கர வெடி குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 169-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
