
காரைக்குடி – பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மின்சார ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது. பல ஆண்டுகளாக அகலப்பாதைப்பணிகள் நடைபெற்று கடந்த சில வருடங்களுக்கு மன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது மின்பாதை அமைக்கும் பணிகள் முடிவுற்று மின்சார ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
பாதுகாப்பு ஆணையர் ஒப்புதலுக்கு பிறகு விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும் என தென்னக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
