தரவு இல்லாமல் பொதுவாக மனு தாக்கல் செய்யக் கூடாது: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..

சரியான தரவுகள் இல்லாமல் பொதுவாக மனு தாக்கல் செய்யக் கூடாது: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைநீர் வடிகால் பணிக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிடில் காவல் நிலையத்தில் புகார் தரலாம் என்று மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மழைநீர் வடிகால் பணியின்போது பள்ளங்களில் விழுந்து இறந்த நபர்களின் விவரங்கள் இல்லை. எனவே பொத்தாம் பொதுவாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணி பாதுகாப்பு இல்லாமல் நடப்பதாக ஸ்டாலின் ராஜா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

‘சென்னை ஒன்று மொபைல் செயலி’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..

திமுக கழக தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

Recent Posts