ஸ்கேட்டிங் போட்டியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவன் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை..

காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவன் பிரகதீஸ்ராம் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.


செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர் மாஸ்டர் பிரகதீஸ்வராம், கோயமுத்துார் அவனி பப்ளிக் பள்ளியில் ஆகஸ்ட்-26 முதல் 30 வரை நடைபெற்ற 11 வயதிற்குட்பட்டோருக்கான வடக்கு மண்டல(North Zone) ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று (300 mtrs In-line) தங்கப் பதக்கத்தை வென்றார்.


இதன் தொடர்ச்சியாக தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று நவம்பர்-13 முதல் ‘ஹரியான-குருகிராம் — குளோபல் HSV பள்ளியில் நடைபெற்ற 11 வயதிற்குட்பட்டோருக்கான சிபிஎஸ்சி(CBSE) தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். SGFI- தேசிய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார். (SGFI-இந்தியாவின் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு).


இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற மாணவன் பிரகதீஸ்ராமுக்கு செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் திரு. Sp. குமரேசன் அவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். பள்ளியின் துணை தாளாளர் திரு. K . அருண்குமார் அவர்களும் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். பள்ளியின் முதல்வர் திருமதி உஷாகுமாரி, துணை முதல்வ ர் திருமதி பிரேம சித்ரா மற்றும் ஆசிரியர்களும் தமது வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்

செய்தி& படங்கள்
சிங்தேவ்

32 பந்துகளில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி: இந்தியா-ஏ அணி வெற்றி..

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி :சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

Recent Posts