தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காரைக்குடியில் ஆக.3 ஜனநாயக பாதுகாப்பு மாநாடு..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக ஆகஸ்ட் 3 காரைக்குடியில் நடைபெற உள்ள ஜனநாயக பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு காரைக்குடி கிளையில் சார்பாக செயல்வீரர்கள் & வீராங்கணைகள் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆசிப் முகமது தலைமையில் மாவட்டச் செயலாளர் அப்துல் சித்திக், மாவட்ட பொருளாளர் அகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையிலும் 01.06.25 அன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் TNTJ மாநிலச் செயலாளர் அல் அமீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
மேலும் இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர்: நாசர் முகைதீன். ,கிளைச் செயலாளர்:‐ முகமது சாதிக். கிளை பொருளாளர் ஹபீப் ரஹ்மான். கிளைத் தலைவர்:‐ பாரூக்.
கிளை துணைச் செயலாளர்:‐ ஜாகிர். கிளை துணைச் செயலாளர்:‐ சாதிக் பாட்ஷா.
ஆண்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வக்ஃப் திருத்த சட்டம் :

இந்திய உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் அவர்கள் தலைமையிலான அமர்வு புதிய வக்ஃப் திருத்த விசாரணை நிறைவு செய்து தனது தீர்ப்பை தேதிக்குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
அதுவைர உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத்தைடை தொடரும் எனினும், இந்திய முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதியரசர்கள் நியாயமான தீர்பபை வழங்க வேண்டும் ,
இஸ்லாமியர்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு வெல்வைத தடுத்து நிறுத்தும் வகையில் தீர்ப்பு அமையவேண்டும் எனும் கோரிக்கையை இந்நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்

இட ஒதுக்கீடு கோரிக்கை:

    கர்நாடக காங்கிரஸ் அரசு அரசின் ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அறிவித்து அதை நடைமுறைப்படுத்த ஆளுநர் உள்ளிட்ட ஒன்றிய அரசுடன் போராடிக்கொ்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம் இதே போன்ற சமூக நீதி பார்வைளை ஆளும் திமுக அரசிடம் தமிழக மூஸ்லீம்கள் எதிர்பார்க்கிறார்கள், 3.5 சதவீத இடஒதுக்கீட்டை குறைந்த பட்சம் 5 சதவீதமாகவாவது அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கைளை பன்னெடுங்காலமாக இஸ்லாமியர்கள் வைத்து வருகின்றனர். சென்ற தேர்தல் அறிக்கைிலும்,பிரசாரத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்க் வாக்குறுதி கொடுத்தார். தான் சொன்ன வாக்கை காக்கும் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5 -லிருந்து 5 சதவீதமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அவர்களை இந்நிக்ழச்சியின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

    பஹல்காம் படுகொலை

    பஹல்காம் படுகொலை,அதைத் தொடர்ந்து நடந்த ஆபரேசன் சிந்துார் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் வகைளில் நாடாளுமன்றக்குழு பல்வேறு எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆபரேசன் சிந்துார் குறித்து எண்ணற்ற கேள்விகள் உள்ளன, போர் நிறுத்தத்தில் அமெரிக்க தலையீடு ஏன்?, நமது தரப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன?, பஹல்காம் சம்பவத்மதின் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு காரணம் யார்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றம கூட்டப்படவேண்டும். என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்,போரின் போது நாட்டின் பாதுகாப்பை உணர்ந்து அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த எதிர்கட்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நாடாளுமன்ற ட்டத்தொடர் கூட்டப்படவேண்டும் என இந்நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

    RTE அனைவருக்கும் கல்வி நிதி :

    RTE எனும் இலவசக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்ப்பதற்கான் அறிவிப்பு இன்னும் தமிழ்நாட்டில் செய்யப்படவில்லை , சுமார் 80,000 மாணவர்கள். வருடந்தோறும் பயன் பெரும் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு பணம் தராததால் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனும் காரணத்தை மாநில அரசு தெரிவித்துள்ளது.
    மாணவர்களின் கல்வியோடு விளையாடும் பாசிச பாஜக அரசை இந்நிகழ்ச்சியின்
    வாயிலாக வன்மையாக கணடிக்கிறோம், ஒன்றிய அரைச நம்பி இருக்காமல் மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து, இந்த வருட சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என இந்நிகழ்ச்சியின் வாயிலாக வலியுறுத்துகிறோம்

    பாலஸ்தீனர்கள் பசியால் மரணம் :

    அயோக்கிய ஜியோனிஸ இஸ்ரேலிய அரசு காஸாவின் மீது கடும் தாக்குதல்களைந் தொடர்ந்து நடத்தி வருகிறது.
    பொதுமக்களுக்கு செல்ல வேண்டியஉணவுப்பொருட்களை தடுத்து நிறுத்தி இருப்பதன்மூலம் காஸா பகுதியில் கடும் பஞ்சம் நிலவுகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 29 குழந்தைகளை் மற்றும் முதிவர்கள் பசியால் இறந்துள்ளனர். இஸ்ரேலின் காட்டுமிராட்டித் தனங்களை பிரான்ஸ்,இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கண்டித்து உணவுப் பெருட்களை தடுக்க கூடாது. இரு நாடு திட்டத்தை குறிப்பிட்ட கால அளவுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனும் கோரிக்கையை வைத்துள்ளன, பாலஸ்தீன மக்களின் துயரங்கள் நீங்கி இஸ்ரேலிய கொடுங்கரங்களில் இருந்து விடுதலைபெற எல்லாம்வல்ல இறைவனிடம் உளமார பிராத்திக்கிறோம்.

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்ஹோத்ரா எனும் யூடியூபர் உள்ளிட்ட 6 பேர் 17.05.2025 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர், இதே போன்ற தேச துரோக செயல்களில் ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களாக பஜக,ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக பாஜகவின் ஆட்சியில் தேசப்பாதுகாப்பு என்பது கவலைக்குரியதாகவே இருந்துள்ளது.

    புல்வாமா தாக்குதல்,காந்தஹார் விமானக் கடத்தல், கார்கில் ஊடுருவல் ஆகிவை இதற்கு உதாரணங்கள், நாட்டின் விடுதலைக்காக எந்த தியாகத்தையும் செய்யாத கூட்டம், தேசப் பாதுகாப்பில் எந்த வித சமரசத்திற்கு இடம் தந்து விடக்கூடாது என ஒன்றிய பாஜக அரசை இந்த நிக்ச்சியின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
    மேற்கண்ட தீர்மானங்களை காரைக்குடி TNTJ நகர துணைத் தலைவர் பாருக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    செய்தி & படங்கள்
    சிங்தேவ்

      பக்கவாதத்துக்கான அதிதீவிர சிகிச்சை : காரைக்குடி அப்பல்லோ ரீச் மருத்துவமனை அகில இந்தியளவில் முதலிடம்..

      Recent Posts