
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் அமைந்துள்ள அப்பலோ ரீச் மருத்துமனையில் பொதுநல சிறப்பு மருத்துவர் டாக்கடர் திருப்பதி தலைமையில் குழு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 204 பேரை மீட்டு அகில இந்தியளவில் சாதனை புரிந்துள்ளது.
பக்கவாதத்துக்கான அதிதீவிர சிகிச்சை அளிப்பதில் காரைக்குடி அப்பல்லோ ரீச் மருத்துவமனை அகில இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவிலேயே சிறப்பு பொதுநல மருத்துவரால் பக்கவாதத்துக்காக அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுவது இங்குதான் முதல்முறை
பக்கவாதம் எனச் சொல்லப்படுகிற மூளையில் ரத்தம் உறைவதால் ஏற்படும் நோயை அதன் தொடக்க அறிகுறிகளிலேயே கண்டறிவதன் மூலம் பெரும் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து தடுக்க முடியும். பொதுவான இரத்த உறைதல் பக்கவாதம் (ischemic stroke) தோன்றிய 4.5 மணி நேரத்தில் அதி தீவிர சிகிச்சை ( Stroke Thrombolysis) அளித்தால் பாதிக்கப்பட்டவரை மீட்க முடியும்.
இந்த சிகிச்சைக்கான உலகளவிலான வெற்றி சதவீதம் என்பது 32 சதவீதமாக உள்ளது. ஆனால் காரைக்குடி அப்பல்லோ ரீச் மருத்துவமனையின் சிறப்பு பொதுநல மருத்துவர் திருப்பதி தலைமையிலான மருத்துவக் குழு வெற்றிகரமாக 204 நோயாளிகளுக்கு அதி தீவிர சிகிச்சை (Stroke Thrombolysis) அளித்துள்ளனர். இதில் ஆச்சரியமூட்டக்கூடிய விஷயம் இந்த நோயாளிகளுக்கு அளித்த சிகிச்சையின் வெற்றி சதவீதம் 85% ஆக பதிவாகியுள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுநல சிறப்பு மருத்துவர் டாக்டர் திருப்பதி தெரிவித்த போது.
பொதுவாக பக்கவாதம் (Stroke) பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தால் அவர்களை மீட்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
பக்கவாததுக்கான அறிகுறிகள் தென்பட்டாலே உடனடியாக அப்பல்லோ ரீச் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் அதிவேகமாக செயல்பட்டு 15 நிமிடங்களில் சிடி ஸ்கேன் எடுத்து, சிகிச்சை தொடங்கிவிடுவோம். அதிதீவிர சிகிச்சை மூலம் முதலில் இரத்த கசிவை நிறுத்தி பின்னர் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளோம்.
இந்திய அளவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அதிக அளவில் எங்கள் மருத்துவமனைக் குழுவினர் மீட்டுள்ளனர்.
பொதுவாக நரம்பியல் சிறப்பு மருத்துவர் குழுதான் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் எங்கள் மருத்துவமனையில் எனது தலைமையில் சிறப்புக்குழு உடனடி சிகிச்சை அளித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். எங்கள் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முதல் செவிலியர்கள் வரை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் குறித்து முறையான பயிற்சி அளித்திருப்பதால் அவர்கள் துரிதமாக செயல்பட்டு மருத்துவ குழுவுக்கான பணியை எளிதாக்கி தருவார்கள்.
நமது மருத்துவமனை கிராமப்புற பகுதியில் இருப்பது கூடுதல் சிறப்பு. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை வந்துசேரும் நேரம் குறைவதால் சிகிச்சை விரைவாக தொடங்கிவிடலாம்.
மூன்று முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சூசை அம்மாளை மீட்டுள்ளோம்.அதுபோல் தெய்வக்கனி என்பவரையும் மீட்டுள்ளோம்.
பக்கவாத பாதிப்பு என்றே தெரியாத தலைசுற்றல், கண் மங்கல்,மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு வந்ததால் அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து உள்ளோம்.
இந்த பக்கவாதத்துக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம், உடல் பருமன், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்