
கோரமண்டல் இன்டர்நேஷனல் தலைவரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான திரு. வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. தமிழ்நாட்டில் மாபெரும் பாராம்பரியம் கொண்ட தொழில் குழுமமான முருகப்பா குழுமத்தை திறம்பட நிர்வகித்தவர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் ..
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘முருகப்பா குழும நிறுவனங்கள், தொழில்கூட்டமைப்புகளில் சிறப்பாக பங்காற்றியவர் ஏ.வெள்ளையன். அருணாசலம் வெள்ளையன் மறைவு தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்’ இரங்கல் தெரிவித்துள்ளார்.
