
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்துள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவில் நேர்த்தி கடனாக 3 லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஹெல்மெட் போட்டு சாக்கில் பக்தர்கள் அள்ளிச் சென்றர்.
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் நடைபெற்ற ஒன்பதாம் நாள் தேரோட்ட திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், கோயிலின் திருத்தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, தேர்நிலையை அடைந்ததும், விநோத வழிபாடாக தேரடி படிகளில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக 101, 201, 501, 1001 என எண்ணற்ற தேங்காய்களை தேரடிப் படிகளில் வீசி எறிந்து உடைத்தனர். குழந்தை பாக்கியம், நோய் தீர்வு, விவசாய வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்கு இவ்விதமாக நேர்த்தி செலுத்தினர். சுமார் 3 லட்சம் தேங்காய்கள் வெடித்துச் சிதறியது. இந்த பரபரப்பான நிகழ்வு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. தேங்காய்களை சேகரிக்க 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தேங்காய்கள் உடையும் இடத்தில் பக்தர்கள் ஹெல்மெட் அணிந்து, பான்ச் கட்டி தங்களை பாதுகாத்து கொண்டனர். முழு பகுதியும் சப்தத்தால் அதிர்ந்தது. இவ்விழாவை காண லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.